×

இந்திய அணியை வீழ்த்துவது மிகவும் கடினம்: நியூசிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னர்

டெல்லி: அக்.22ம் தேதி இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஞாயிற்றுக்கிழமை தர்மசாலா மைதானத்தில் தொடங்கும் இப்போட்டிக்கு நியூசிலாந்து அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியை வீழ்த்துவது மிகவும் கடினமான ஒன்று என நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணி அகமதாபாத், ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்ற போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்று வெற்றி நடைபோட்டு வருகிறது. மேலும் நியூசிலாந்து அணி போட்டியின் பல்வேறு சூழ்நிலைகளுக்கு நன்கு மாற்றியமைத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவுடனான போட்டிக்கு ஆயத்தமாகி வருகிறது.

இந்த போட்டி குறித்து நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர் கூறுகையில்; “இந்திய அணியை வீழ்த்துவது மிகவும் கடினம், இந்திய அணியுடன் அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது மிகவும் சவாலானதாக இருக்கும். தர்மசாலாவில் கொஞ்சம் வேகம் மற்றும் பவுன்ஸ் உள்ளது, ஆனால் நாம் விளையாடும் போது பிட்ச் எவ்வாறு உள்ளது என்பதை பார்க்க வேண்டும். பவர்பிளே மிகவும் முக்கியமானதாக இருக்கும்” என மிட்செல் சான்ட்னர் கூறினார்.

The post இந்திய அணியை வீழ்த்துவது மிகவும் கடினம்: நியூசிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னர் appeared first on Dinakaran.

Tags : Team India ,Mitchell Santner ,Delhi ,India ,New Zealand ,Dharamsala ,
× RELATED இடைக்கால ஜாமின் பெற்ற கெஜ்ரிவால்...